Loading...
Thursday 13 February 2014

ஐ படத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் எமிஜாக்சன்!


மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்தவர் இங்கிலாந்து நடிகை எமிஜாக்சன். அழகில் முத்திரை பதித்த அளவுக்கு அவர் நடிப்பில் முத்திரை பதிக்காதபோதும், அவரையும் நமது தமிழ் கலாசாரத்திற்கேற்ற நடிகையாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஐ படத்திற்கு புக் பண்ணினார் டைரக்டர் ஷங்கர்.
அதையடுத்து, பக்கா தமிழ் பெண்ணாகவே அவரது கெட்டப்பை மாற்றி நடிக்க வைத்தவர், எமிக்குள் இருக்கும் நடிப்பாற்றலை நூறு சதவிகிதம் வெளியே கொண்டு வரும் வகையில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகளிலும் நடிக்க வைத்திருக்கிறாராம். கதை மற்றும் காட்சியின் ஆழத்தினை புரிந்து கொண்ட எமியும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினாராம்.
அதனால், ஒருநாள் மொத்த யூனிட் முன்பு, எமியின் நடிப்பைப்பற்றி பெருமையாக பேசினாராம் ஷங்கர். அதைக்கேட்டு பூரித்துப்போன எமிஜாக்சன், அதன்பிறகு தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சிகளிலும் இன்னும் ஈடுபாடு காட்டி நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாராம்.
குறிப்பாக, சில ஆவேசமான காட்சிகளில் நடிப்பில் விஸ்வரூபமே எடுத்திருக்கிறாராம் எமிஜாக்சன். அதனால் ஐ படம் திரைக்கு வரும்போது, எமி மீதுள்ள ஹாலிவுட் நடிகை என்ற முத்திரை மறைந்து தமிழ் நடிகை என்ற இமேஜ் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்கள்.
அந்த அளவுக்கு தமிழ் கலாசாரத்தையும், தமிழ் உணர்வுகளையும் அழுத்தம் திருத்தமாக தனது நடிப்பில் அவுட்புட் கொடுத்திருக்கிறாராம் எமி.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP